திருத்தணி - Thiruthani

திருத்தணி: கார் மோதி 70 வயது மூதாட்டி பலி

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(70 வயது) இவர் உடல்நிலை சரி இல்லையாததால் ஆந்திரா மாநிலம் நகரியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு பேருந்தில் வந்தவர் முருகம்பட்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்கு பதிலாக பொன்பாடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து நடந்து சென்று கொண்டிருந்தபோது திருப்பதி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில்   திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் மூதாட்டி கோவிந்தம்மாள் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. மோதிய கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా