
நீட் தேர்வுக்கான போராட்டம் தொடரும் - முதல்வர்
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அடுத்தக்கட்ட சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் பேசிய CM ஸ்டாலின், நீட் தேர்வை தொடக்கம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. நுழைவுத் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கக்கூடியது. தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை நீட் சிதைக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடி வருகிறோம் என்றார்.