குமுளி அருகே வண்டிப் பெரியாறு, வல்லக்கடவு அருகே பென்னாநகா், அரணக்கல் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த 2-ஆம் தேதி புலி ஒன்று நடமாடியது. இது வீடுகளில் வளா்க்கப்பட்ட கால்நடைகளை தாக்கி கொன்றதுடன், மனிதா்களையும் தாக்கத் தொடங்கியது.
இதையடுத்து, இந்தப் புலியை பிடிக்க வனத்துறையினருக்கு அந்தப் பகுதியினா் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, தேக்கடி, பெரியாறு புலிகள் காப்பக வனத்துறையினா் கடந்த இரு வாரங்களாக அந்தப் புலியை பிடிக்க முயற்சி மேற்கொண்டனா். ஆனால் அது பிடிபடவில்லை. இதையடுத்து, 'ட்ரோன் கேமரா' மூலம் புலியின் நடமாட்டத்தை அவா்கள் கண்காணித்தனா்.
அப்போது அரணக்கல்லில் 16-ஆவது பிரிவு தேயிலைக் காட்டுக்குள் புலி நடமாடுவதை வனத்துறையினா் உறுதி செய்தனா். இதைத் தொடா்ந்து கூண்டு வைத்தோ, மயக்க ஊசி செலுத்தியோ அதை உயிருடன் பிடிக்க அவா்கள் திட்டமிட்டனா்.தேயிலைக் காட்டுக்குள் பதுங்கி இருந்த புலியை 15 மீட்டா் தொலைவிலிருந்து மயக்க ஊசி செலுத்து உயிருடன் பிடிக்க கால்நடை மருத்துவா் அனுராஜ் வனத்துறையினா் முயன்றனா்.
இந்த முயற்சியில் 2 முறை புலி தப்பியது. மேலும் வனத்துறையினரை அது தாக்கியது. இதன் பிறகு, 3-ஆவது முறையாக வேறு வழியின்றி புலியை நோக்கி துப்பாக்கியால் வனத்துறையினா் சுட்டதில் புலி சுருண்டு விழுந்தது.