தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் மாரடைப்பால் தாய் உயிரிழந்த நிலையில் அவரின் மகள், தாயின் உடலை வணங்கிவிட்டு பள்ளி தேர்வுக்கு சென்ற வீடியோ வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது. காவியா என்ற மாணவியின் தந்தை ராஜேந்திரன் மனவளர்ச்சி குன்றியவர் என்பதோடு உயிரிழந்த கலாவின் உழைப்பை மட்டுமே அக்குடும்பம் நம்பியிருந்ததால் மாணவிக்கு அரசாங்கம் உதவி செய்ய உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.