குரு பெயர்ச்சி முன்னிட்டு முதல் கால பூஜை துவக்கம்
திருக்காட்டுப்பள்ளியில் சௌந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு முதல் கால பூஜை தொடங்கியது. முன்னதாக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புனித நீர் கொண்டுவரப்பட்டு முதல் கால பூஜை தொடங்கியது. ஏற்பாடுகளை கோவில் சிவாச்சாரியார் குமார் தலைமையில் சிவாச்சாரியார்கள் மேற்கொண்டு வருகின்றனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.