தஞ்சாவூர் கோட்டத்துக்கு உட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ம் தேதி காலை 10 மணியளவில் நடக்கிறது. தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட தஞ்சை, திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறும்படி தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்துள்ளார்.