எடப்பாடி - Edappadi

பிறந்து 18 நாட்களில் பச்சிளம் குழந்தை திடீர் சாவு

பிறந்து 18 நாட்களில் பச்சிளம் குழந்தை திடீர் சாவு

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் சித்தூர் ஊராட்சி, மேல் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சங்கீதா (வயது 23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவிற்கு கடந்த 28-ந் தேதி மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் கடந்த 3-ந் தேதி மேல் சித்தூர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் கடந்த 15-ந் தேதி அன்று திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சங்கீதாவின் குழந்தைக்கு சித்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றபோது அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டா்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் பிறந்து 18 நாளான பச்சிளம் குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை இறந்தது குறித்து அதன் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా