சிங்காநல்லூர் - Singanallur

சிங்காநல்லூரில் கட்டிடத்தில் இருந்து விழுந்து பெண் சாவு

சிங்காநல்லூரில் கட்டிடத்தில் இருந்து விழுந்து பெண் சாவு

கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி கோவிந்தம்மாள் ( 49). கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.  கடந்த சில நாட்களாக கோவை சிங்காநல்லூர் ஆறுமுகம் கார்டன், சென்ட்ரல் ஸ்டுடியோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று கோவிந்தம்மாள் கட்டிடத்தின் முதல் மாடியில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மேலே இருந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலைப்பகுதியில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ளவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.   ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோவிந்தம்மாள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా