கிணத்துக்கடவு - Kinathukadavu

காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை

கோவை உப்பிலிப்பாளையம் பகுதியில் உள்ள கதர் அங்காடி நிலையத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (அக்.,2) சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு, காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் ராஜேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டு மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் விற்பனையையும் அவரே பெற்றுக் கொண்டார்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా