முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!

73பார்த்தது
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு கோவையில் மாவட்ட ஆட்சியர் முதியோர்களுடன் நேற்று படகு சவாரி செய்தார். கோவை மாவட்டம் உக்கடம் பெரியகுளம் பகுதியில் முதியோர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பங்கேற்றார். இந்த நிகழ்வில் முதியோர் இல்லங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் அழைத்து வரப்பட்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முதியோர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், அரசு சார்பில் முதியோர் நலனுக்காக மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப் படுகிறது. இதனை ஊக்குவிக்க நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப் படும். முதியோர்கள் வெளியில் வருவதால் சமூகத்துடன் அவர்களுக்கு இணக்கம் ஏற்படும். இளைஞர்களும் முதியவர்கள் உடன் இணைந்து கலந்துரையாடினால் புரிதல் வரக் கூடும் என்று கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி