ஓசூர் - Hosur

அளவுக்கு அதிகமாக மது குடித்த வியாபாரி உயிரிழப்பு

அளவுக்கு அதிகமாக மது குடித்த வியாபாரி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூர் பேடரப்பள்ளியை சேர்ந்தவர் தன்பால் (41) இவர் மருந்து கடை வைத்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் மன ஊளைச்சலில் இருந்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஓசூர் பேருந்து நிலையம் அருகே தங்கும் விடுதிக்கு தனபால் சென்றார். அங்கு அவர் 2 நாட்களாக, அளவுக்கு அதிகமாக மது வாங்கி குடித்துள்ளார். நேற்று(செப்.11) அவரது அறையின் கதவு வெகு நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால், ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது. அங்கு தனபால் உயிரிழந்து கிடந்தார். இதையெடுத்து அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி
Sep 12, 2024, 23:09 IST/பர்கூர்
பர்கூர்

போச்சம்பள்ளி விவசாயி கொலையில் பெண்கள் உள்பட மூன்று பேர் கைது

Sep 12, 2024, 23:09 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அருகே உள்ள சின்ன பாறையூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (62) விவசாயியான. இவரது அண்ணன் கண்ணாயிரம் (65). இவர்களுக்குள் நிலம் தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை இருந்ததுள்ளது இந்த நிலையில். பழனியை, அவருடைய அண்ணன் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்தனால் இரண்டு தரப்பினர் மோதிக் கொண்டனர். இது தொடர்பாக பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணாயிரம், கணபதி, கவிதா, சிவகாமி ஆகிய 4 பேர் மீது வழக் குப்பதிவு செய்தனர். அதில் கணபதி, கவிதா, சிவகாமி ஆகிய 3 பேரையும் பாரூர் போலீசார் கைது செய்தனர். கண்ணாயிரத்தை தேடி வருகிறார்கள்.