சென்னையில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் இன்று சூறையாடப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒருவரின் விமர்சனம் ஏற்புடையதாக இல்லையென்றால், அதைச் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து, இப்படி அராஜகம் செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்த இழிவான செயலைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக தலைவர் அறிவுறுத்தலின் பேரில் கேட்டுக்கொள்கிறேன்.