"மாய உலகத்தில் இருந்து முதல்வர் வெளியே வர வேண்டும்" - ஈபிஎஸ்

58பார்த்தது
"மாய உலகத்தில் இருந்து முதல்வர் வெளியே வர வேண்டும்" - ஈபிஎஸ்
போதைப்பொருள் கைது நடவடிக்கை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “சென்னையில் வீட்டில் போதைப்பொருள் தயாரித்ததாக கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. போதைப்பொருள் புழக்கம் கட்டுக்குள் இருப்பதாக நினைக்கும் மாய உலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியே வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி