விண்வெளி நிறுவனம் மீது பயங்கரவாத தாக்குதல்.. 10 பேர் பலி

58பார்த்தது
துருக்கியில் உள்ள விண்வெளி நிறுவனத்தில் இன்று (அக்.23) பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். அங்காராவில் உள்ள விமான நிறுவனத்தில் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி தெரிவித்துள்ளார். வெடிகுண்டு தாக்குதலும் நடந்ததாக தெரிகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி