வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

52பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்.,2) கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது. அதில், அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம் கலந்துக்கொண்டார். கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் தின்னலூர் ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலங்கள், மேயாக்கால் நிலங்களை அளந்து, ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டியும், 100 நாள் வேலை வழங்க கோரிக்கை வைத்தனர்.

அதுமட்டுமல்லாது மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசத்தை சிறை பிடித்து முற்றுக்கையிட்டனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோரிக்கைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஞானப்பிரகாசம் கூறியதையடுத்து அவரை விடுவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி