குழந்தைகள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டத்தை ஆஸ்திரேலியா இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ், சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வயது வரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளது. குழந்தைகளை விளையாட்டு மைதானங்களில் பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இச்சட்டம் அமலாகும் பட்சத்தில் சமூக ஊடக பயன்பாட்டிற்கு வயது வரம்பு நிர்ணயித்த முதல் நாடு ஆஸ்திரேலியாவாக வாய்ப்புள்ளது.