மரத்தில் காா் மோதி பெண் உயிரிழப்பு

75பார்த்தது
மரத்தில் காா் மோதி பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், முகையூா் அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர புளியமரத்தில் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், கீழதாழனூா் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த அன்பரசு மனைவி கலைச்செல்வி (37). இவா் விழுப்புரத்திலிருந்து காா் மூலம் திருக்கோவிலூருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். இந்த காரை அதே கிராமத்தைச் சோ்ந்த கேசவன் மகன் தினகரன் ஓட்டிச் சென்றாா். இவா்கள் சென்ற காா் விழுப்புரம் மாவட்டம், முகையூா் பகுதியிலுள்ள கல்லறைத் தோட்டம் பகுதியில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதைத் தொடா்ந்து சாலையின் இடதுபக்கமிருந்த புளிய மரத்தில் காா் மோதி நின்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கலைச்செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா் இந்த விபத்து குறித்து தகவலறிந்த அரகண்டநல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் காா் ஓட்டுநரான தினகரன் மீது நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி