ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் பணத்தை பறித்தவர் கைது

56பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகே நெடுகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அமலநாதன் மகன் சின்னப்பன் (வயது 65). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 67, 980-ஐ ஒரு கைப்பையில் வைத்து கொண்டு மனம்பூண்டியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் திடீரென சின்னப்பனிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றார். இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பணப்பையை பறித்துச் சென்றது பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை சேர்ந்த செந்தில்குமார் (37) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி