கோவை: காலை முதலே களைகட்டும் மது விற்பனை!

70பார்த்தது
கோவை, கோவில்மேடு பகுதியில் அமைந்துள்ள காவல் துறை சோதனை சாவடி அருகே உள்ள டாஸ்மாக் மதுபான பார் ஒன்று, அரசு விதிமுறைகளை மீறி காலை 6 மணி முதலே செயல்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு பிறகே திறக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. ஆனால், இந்த மதுபான பார் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், குடிமகன்கள் காலையிலேயே மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடியபடி வெளியேறுவதும், சோதனை சாவடி அருகே சாலையில் நின்று பேசிக் கொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி