மேட்டுப்பாளையம் - Mettupalayam

மலைப்பாதையில் சுற்றித்திரிந்த காட்டு யானை!

மலைப்பாதையில் சுற்றித்திரிந்த காட்டு யானை!

மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதை குஞ்சப்பனை அருகே நேற்று இரவு ( செப்டம்பர் 15) வனப்பகுதியில் இருந்து வந்த காட்டி யானை ஒன்று சுற்றித்திரிந்தது. அந்த யானை மலைப்பாதையோரம் இருந்த செடி கொடிகளில் இலை தழைகளை தின்றது. யானையை கண்டதும் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வெகு தொலைவில் வைத்தே தங்களுடைய வாகனங்களையும் நிறுத்திவிட்டனர். இதனால் மலைப்பாதையில் இருபுறமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்படி யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా