78 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நலத்திட்டம்

75பார்த்தது
78 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 66வது வார்டு, புளியகுளம் கருப்பராயன் வீதி பகுதியில் சுதந்திரதினவிழா காலை 9. 30 மணியளவில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நமது மண்டல செயலாளர் ரங்கநாதன் தலைமையேற்றார். துணைத்தலைவர் தங்கவேலு தேசியகொடியை ஏற்றினார். மாவட்ட செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை செயலாளர் கார்கில் கார்த்திகேயன், மாநகர செயலாளர்கள் சரவணன் மற்றும் மணிக்கொடி செய்தார்கள். இந்நிகழ்வில் மண்டல அமைப்பாளர் சித்திக், மாவட்ட செயலாளர்கள் தணவேந்திரன், வரதராஜன் , மாவட்ட அமைப்பாளர் கார்த்திகேயன், மாநகர செயலாளர்கள் சிராஜூதீன், தாஜுதீன், தொழிற் பேரவை ஆணந்த், வார்டு செயலாளர்கள்ஆனந்தராஜ், ராஜகண்ணியப்பன், பூபதி, ரஞ்சித், ஜலில், சாந்தி, உமா, சங்கீதா கிளை செயலாளர்கள் சுரேன், மாரிமுத்து, விவின், ராஜ்கமல், மதி, முஸ்தபா, நாகேந்திரன், முருகன், திரிஷா, பால்ராஜ், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, ஹரி, வாசு தேவன், E S I ரவி, அற்புதராஜ், சீனி, பழனிசாமி, பிரகாஷ், மற்றும் மய்ய நண்பர்கள் பங்கேற்றனர். புளியகுளம் ஆனந்த் நன்றியுரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி