கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளரின் தாயார் மறைவு ஓபிஸ் அஞ்சலி

83பார்த்தது
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் டி. மோகன்ராஜ் அவர்களின் தாயார் சரஸ்வதி வயது முதிர்வுகாரணமாக உடல்நலக் குறைவுஏற்பட்டு இன்று இயற்கையை எய்தினார். தகவல் அறிந்த அ. தி. மு. க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று மாலை கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் டி மோகன்ராஜ் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதில், கோவை மாவட்டம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி