சேலம் நகரம் - Salem City

சேலம் மாவட்ட காவல்துறையில் 32 பேர் இடமாற்றம்!

சேலம் மாவட்ட காவல்துறையில் 32 பேர் இடமாற்றம்!

சேலம் மாவட்ட காவல்துறையில் குறிப்பிட்ட சில போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் தங்களுக்கு விருப்ப இடமாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்து இருந்தனர். இந்த நிலையில் 7 சப்-இன்ஸ்பெக்டர்கள், 13 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 12 ஏட்டுகள் என மொத்தம் 32 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஓமலூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், கொங்கணாபுரத்திற்கும், ஏத்தாப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் சங்ககிரிக்கும், தம்மம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் கொண்டலாம்பட்டி நெடுஞ்சாலை ரோந்து பிரிவுக்கும், கொங்கணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஜலகண்டாபுரத்திற்கும், அங்கு பணியாற்றிய குமரவேல், ஆத்தூர் நெடுஞ்சாலை ரோந்து பிரிவுக்கும், தீவட்டிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி மேட்டூர் நெடுஞ்சாலை ரோந்து பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களான ஆத்தூர் டவுன் பரமசிவம், மல்லூருக்கும், அங்கு பணியாற்றிய திருநீலகண்டன் ஆத்தூர் டவுனுக்கும், வாழப்படியில் பணியாற்றிய மணிகண்டன் தலைவாசலுக்கும், ஏத்தாப்பூர் கதிரவன், கெங்கவல்லிக்கும், கருமலைக்கூடல் வேணுகோபால், தொளசம்பட்டிக்கும் உள்பட 13 பேர் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் பிறப்பித்துள்ளார்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా