அயன்பேரையூர்: வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

57பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன் பேரையூர், பசும்பலூர் காரியனூர், திருவாளந்துரை ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ. 19.52 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், இன்று (05. 10. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், உதவி செயற்பொறியாளர் (சாலைகள் மற்றும் பாலங்கள்) லதா, வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமணியன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன், வேப்பந்தட்டை உதவி பொறியாளர் சதீஷ் குமார், காரியனூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமார், ஊரக வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி