ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

பிரம்மோற்சவ விழா: தென்திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், தமிழகத்தின் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்து உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா இன்று (செப்.,21) வெகு விமர்சனமாக கொண்டாடபடுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாநிலகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் புரட்டாசி மாதம் 4 வாரத்தின் முதல் வார சனிக்கிழமையான இன்று (செப்.,21) அதிகாலை சீனிவாச பெருமளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்தி கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் காணிக்கைகளை வழங்க முடியாதவர்கள். இக்கோவிலுக்கு வந்து தரிசனம் புரிந்து விவசாய தானிய பொருள்களை கணிக்கையாக வழங்குவார்கள். இதனால் நாட்டு மக்களின் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகையால் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து, மருத்துவம், குடிநீர், கழிப்பிட ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்