அருப்புக்கோட்டை - Aruppukkottai

பிறந்தநாள் கேக்கை வாள் வைத்து வெட்டிய இளைஞர்

பிறந்தநாள் கேக்கை வாள் வைத்து வெட்டிய இளைஞர்

அருப்புக்கோட்டையில் இளைஞர் ஒருவர் வாள் வைத்து தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நகர காவல் நிலைய போலீசார் அந்த இளைஞர் மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ராஜகுரு என்பவர் கடந்த 5 ம் தேதி நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது அவருக்கு நண்பர் ஒருவர் மாலை அணிவிக்கிறார். அப்போது நண்பர்கள் முன்னிலையில் வாளுடன்(பித்தளை வாள்) கேக் வெட்டி கொண்டாடுகிறார். அவரது நண்பர் ஒருவர் சினிமாவில் வரும் காட்சிபோல வாளை கையில் வைத்து நடனமாடுகிறார். இதைத் தொடர்ந்து நண்பர்களுடன் குழு புகைப்படம் எடுப்பது போன்ற காட்சிகள் உள்ள தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து அந்த இளைஞர் ராஜகுரு மீது அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுதல் , சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இளைஞர் பாஜக பிரமுகர் என சில ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அவர் பாஜக உறுப்பினர்கூட கிடையாது என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Sep 12, 2024, 08:09 IST/சாத்தூர்
சாத்தூர்

சாத்தூர்: அகழாய்வில் இப்படியும் ஒரு பொருள் கண்டெடுப்பு...

Sep 12, 2024, 08:09 IST
சாத்துார் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே உள்ள வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜீன் 18-ம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது. முன்னதாக கண்ணாடி மணிகள் கல்மணிகள், சூது பவள கல் மணிகள், முழுமையான சங்கு வளையல், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, கிபி 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால செம்பு காசு, அணிகலன்கள், திமிலுடன் கூடிய காளை உருவ பொம்மை உள்ளிட்ட 1800-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டெடுக்கப்ட்டுள்ளது. இதனை முன்னோர்கள் உணவு அருந்தவோ அல்லது மண் பாண்டங்களின் மூடியாக பயன்படுத்தி இருக்கலாம் என அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.