அருப்புக்கோட்டை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி

74பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டியில் இன்று அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் யோகா வாசுதேவன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மணமக்கள் அஜய் வாசுதேவன் - காவியா தம்பதிரை பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். மேலும் இந்த விழாவில் தேமுதிகவை சேர்ந்த விஜய பிரபாகரன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் மணமக்களை வாழ்த்தினர். விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு திருமண வீட்டார்கள் வீரவாள் வழங்கி கௌரவித்தனர். ‌

இந்த திருமண விழா நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,

கழகம் ஒரு குடும்பம். அந்த குடும்பத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தால் எப்படி மகிழ்ச்சி கிடைத்திருக்குமோ அந்த மகிழ்ச்சியை தற்போது அனைவருக்கும் கிடைத்திருக்கிறது. அதனை தொடர்ந்து,
மணமக்களையும் மணமக்கள் குடும்பத்தாரையும் வாழ்த்தி பேசியதோடு, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி தொகுதியில் 40, 000 வாக்குகள் முன்னிலை பெற்றோம், அருப்புக்கோட்டையில் கூட்டணி கட்சியான தேமுதிக நின்றாலும் 13, 000 வாக்குகள் அதிக அளவில் பெற்றுள்ளோம். அருப்புக்கோட்டை தொகுதி மக்களுக்கு நன்றி என பேசினார். இந்த திருமண விழா நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ‌

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி