பெண் டிஎஸ்பிஐ தாகி சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது

78பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மினி வேன் டிரைவர் காளிக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும் முயன்ற போது போராட்டக்காரர்களை அருப்புக்கோட்டை பெண் டி. எஸ். பி காயத்ரி தடுக்க முயன்றார். அப்போது போராட்டக்காரர்கள் சிலர் டிஎஸ்பிஐ தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினர். இந்த வழக்கில் அன்றைய தினமே ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பட்டியை சேர்ந்த இருளாண்டி என்பவர் மகன் முருகேசன்(28) தலைமறைவானார். இதனையடுத்து மாவட்ட எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில்
திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை அருப்புக்கோட்டை அருகே தொப்பலாக்கரை பகுதியில் காட்டுக்குள் முருகேசன் மறைந்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர் போலீசாரை கண்டதும் முருகேசன் தப்பி முயற்சித்தார். ‌ அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் முருகேசனுக்கு வலது கை முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி