ரூ.2 கோடி மோசடி: நடிகர் விமல் அளித்த புகாரில் நீதிமன்றம் உத்தரவு

84பார்த்தது
ரூ.2 கோடி மோசடி: நடிகர் விமல் அளித்த புகாரில் நீதிமன்றம் உத்தரவு
பைனான்சியர் கோபி, விநியோகஸ்தர் சிங்காரவேலன், அவரது மேலாளர் விக்னேஷ் ஆகியோர் ரூ.2 கோடி மோசடி செய்ததாக நடிகர் விமல் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று (செப். 12) போலீசார் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. காவல்துறையின் விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி