மயிலம் - Mailam

விழுப்புரம்: ரூ. 3. 75 கோடியில் மின்கல வாகனங்கள் தொடக்கம்

விழுப்புரம்: ரூ. 3. 75 கோடியில் மின்கல வாகனங்கள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழுத் தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், செஞ்சி எம்எல்ஏ கே.எஸ். மஸ்தான் பங்கேற்று வீடூர், பெலாக்குப்பம், பெரமண்டூர் உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ரூ.3.75 கோடி மதிப்பிலான மின்கலத்தால் இயங்கக்கூடிய 9 மூன்று சக்கர வாகனங்களை வழங்கி, அதன் செயல்பாட்டை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் இரா.மாசிலாமணி, சேதுநாதன், திமுக மயிலம் வடக்கு ஒன்றியச் செயலர் மணிமாறன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் புனிதா, வீடூர் ஊராட்சித் தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வகுமார், கிஷோர், கண்ணன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా