திரும்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஆலயத்தில் உள்ள முனீஸ்வரர் சிலைக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.