17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி விபத்து.. மூதாட்டி பலி

65பார்த்தது
காஞ்சிபுரம்: கங்கை அம்மன் கோவில் தெருவில் 17 வயது சிறுவன் ஒருவன், வீட்டில் இருந்து வெளியே காரை எடுக்க முயன்றுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில், மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: TamilJanamNews
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி