முசிறி - Musiri

ஸ்ரீரங்கம்: கடன் தொல்லையால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீரங்கம்: கடன் தொல்லையால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீரங்கம் ராகவேந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் (வயது 40) இவர் திருமணம் ஆகாதவர். இந்நிலையில் தொழில் நடத்துவது தொடர்பாக பல்வேறு இடங்களில் நிறைய கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட கீர்த்தி ராஜன் கடந்த 12 ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் சேலையை பயன்படுத்தி ஃபேன் கொக்கியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய கீர்த்தி ராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా