அரசு பஸ் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு

நாமக்கர் ராசிபுரத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியது. ஆர்டிஓ அலுவலகம் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் சக்கரம் கழன்று சாக்கடையில் விழுந்தது. பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக தப்பினர். ஓட்டுநரின் சாதுர்யத்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.