திருச்சி மாவட்டத்தில் பங்குனி திருவிழா பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் திருத்தேர் திருவிழா வருட வருடம் மிக விமர்சையாக நடைபெறும் இந்த ஆண்டு முன்னிட்டு கோவில் வளாகம் மதுர காளியம்மன் மற்றும் ஓலைப் பிடாரி அம்மன் இரட்டை தேர் திரையலங்காரம் மற்றும் தேர் ஏற்றும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது
மதுர காளியம்மன் ஓலைப்படையாரியம்இரட்டை தலை அலங்காரத்தில் கோட்டைமேடு சந்தைப்பேட்டை புதூர் வளையல் கார வீதி பண்டார தெரு தெற்கு அரங்கூர் உள்ளிட்ட 18 பட்டி கிராம மக்கள் ஊர்வலமாக மேளதாளத்துடன் பூத்தட்டு எடுத்து வந்தனர்
மதுர காளியம்மன் 32 அடியில் ஓலைப்பிடாரியம்மன் 30 அடி தேறும் பக்தர்கள் பொதுமக்கள் தலையிலும் தோலிலும் சுமந்து 18 பட்டி சுற்றி வருவதால் திருவிழாவை காண திருச்சி கரூர் நாமக்கல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 50, 000 மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொள்வதால் திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் முசிறி டி எஸ் பி சுரேஷ்குமார் தொட்டியம் ஆய்வாளர் ஞானசேகர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்