
பனிப்பொழிவு காலத்திலும் கைகொடுக்கும் பூண்டு விவசாயம்
நீலகிரி மாவட்டம் அதிக அளவில் விவசாயம் செய்யும் ஒரு மாவட்டமாக விளங்குகிறது. இங்குத் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் வெள்ளைப் பூண்டு விவசாயம் நடைபெறுகிறது. மலை மாவட்டத்தில் மலைப்பூண்டு விவசாயம் செய்பவர்கள் அதிகமாக இருப்பினும் சிறந்த லாபம் ஈட்டாமலேயே இருந்தனர். ஆனால் சமீப காலமாக வெள்ளைப் பூண்டுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் பூண்டு சாகுபடி செய்வதில் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். பனிப்பொழிவு காலத்திலும் நல்ல விளைச்சல் கிடைப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.