மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கூத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லையன் (வயது 70) விவசாய தொழிலாளி இவர் நேற்று(செப்.29) காலை நடுபடுகை பகுதியில் உள்ள வயலுக்குச் சென்று மின்மோட்டார் இயக்கினார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. செல்லையன் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசும் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்லையன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் செல்லையன் மகன் நடராஜன் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.