திருவையாறு - Thiruvaiyaru

திருக்காட்டுப்பள்ளி அருகே அணுகு சாலை அமைத்து தரக்கோரிக்கை

திருக்காட்டுப்பள்ளி அருகே அணுகு சாலை அமைத்து தரக்கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூடநாணலில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு அணுகு சாலை விரைவாக அமைத்துத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடநாணலில் புதியதாக துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டுள்ளது. வேளாண் மையத்திற்கு செல்ல அணுகு அமைக்கப்படவில்லை. சாலை வசதி இல்லாததால் வாடகை கட்டடத்திலேயே இயங்கி வந்தது. அரசுக்கு வாடகை பிரச்சனை வரவே கடந்த மாதம் முன் புதிய கட்டடத்தில் செயல்பட தொடங்கியது. ஆனால் இன்று வரை வேளாண் பொருட்கள் எடுத்து வருவதற்கும், விவசாயிகள் வாங்கிச் செல்வதற்கும் வாகனங்கள் வந்து செல்ல தார்சாலை அமைக்கப்படாமல் மண் சாலையாகவே உள்ளது. மழை பெய்தால் வேளாண் பொருள்கள் கொண்டு வரவோ, எடுத்துச் செல்லவோ வாகனங்கள் வந்து செல்ல முடியாது. எனவே துணை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு அனைத்து வாகனங்களும் சென்று வரும் வகையில் அணுகு சாலையை தார் சாலையாக அமைத்துத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా