திருத்துறைப்பூண்டி - Thiruthuraipoondi

நன்னிலம் அருகே ஆடு திருடர்களை துரத்திப்பிடித்த போலீசார்

நன்னிலம் அருகே திருமீயச்சூர், கோவில் தெருவில் உள்ள சுபாஷ் என்பவரது வீட்டின் அருகே ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்துள்ளது. இந்த நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் ஆடுகளை காரில் ஏற்றியுள்ளனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பேரளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த பேரளம் காவல்துறையினர் விரைந்து வந்து ஆடுகளை கடத்த பயன்படுத்திய கார், ஆடுகள் மற்றும் கடத்திய குத்தாலம் பகுதி காளியம்மன் கோயில் தெருவை சார்ந்த ராஜேஷ் கண்ணன், சோலை குமரன், குத்தாலம் சுந்தராம்பாள் நகரை சார்ந்த வீரமணிகண்டன், குத்தாலம் புது பிடாகை பகுதியை சார்ந்த ராஜசேகரன், திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சார்ந்த லோக ராம் ஆகியோரை விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


திருவாரூர்