முத்துப்பேட்டையில் எஸ். டி. பி. ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
முத்துப்பேட்டையில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக சுகாதாரத் துறையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்



திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட கொய்யா தோப்பு பகுதி மக்களுக்கு குடிநீர் இணைப்புகளை உடனடியாக வழங்க வேண்டும்
கோறையாற்றில் சாக்கடை கலக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்
முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் பணி மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றி திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துப்பேட்டை நகர தலைவர் ராஜ்முகமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி தொண்டர்கள் மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக சுகாதாரத் துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி