காவிரிச்செல்வன் விக்னேஷுக்கு மன்னார்குடியில் நினைவஞ்சலி

81பார்த்தது
காவிரி நதி நீர் பிரச்சனைக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் 2016 ஆம் ஆன்டு நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பேரணியில் காவிரி செல்வன் விக்னேஷ் தீ குளித்து உயிரிழந்தார். அவரது 8 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி மன்னார்குடி மேல வீதியில் இன்று நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பொதுமக்கள் விக்னேஷின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். காவிரி நதி நீர் பிரச்சனை குறித்தும் விக்னேஷ் இன் தியாகம் குறித்தும் கூட்டத்தில் பங்கேற்றோர் உரையாற்றினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி