பனை மரத்தில் மோதி நின்ற அரசு பஸ்

60பார்த்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து பயணிகளுடன் நேற்று(செப்.12) இரவு திருவாரூர் நோக்கி அரசு பஸ் சென்றது. இந்தப் பஸ்ஸின் டயர் திடீரென பஞ்சரான நிலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வாய்க்காலில் இறங்கி, அங்கிருந்த பனை மரத்தில் மோதி நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறல் சத்தமிட்டனர். இதைக் கேட்டு அந்த வழியே சென்றவர்கள் பஸ்ஸில் இருந்தவர்களை உடனடியாக மீட்டனர். இந்த விபத்தில் பெரியளவில் காயமின்றி அதிஷ்டவசமாக பயணிகள் அனைவரும் தப்பினர். விபத்துகுறித்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி