திருத்துறைப்பூண்டி - Thiruthuraipoondi

பள்ளிக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர்

பள்ளிக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர்

திருத்துறைப்பூண்டி வடக்கு வீதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி உபகரணங்கள் வழங்கி சிறப்பித்தனர் திருத்துறைப்பூண்டி வடக்கு வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122- வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் நகரத் தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான P. P. எழிலரசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் K. R. ரமேஷ், வழக்கறிஞர் சங்கத் தலைவர் N. பாலன், கிழக்கு வட்டார தலைவர் V. தியாகராஜன் , மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவர் K. அஜித் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கினர்.

வீடியோஸ்


திருவாரூர்
Jul 15, 2024, 10:07 IST/திருவாரூர்
திருவாரூர்

திருவாரூரில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

Jul 15, 2024, 10:07 IST
நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டு நீட் தேர்வினால் ஏற்படும் பாதகங்கள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும், குஜராத்தில் முதலமைச்சராக மோடி இருந்தபோது நீட் தேர்வை எதிர்த்தது குறித்தும் விளக்கமாக எடுத்து கூறி கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.