நன்னிலம் - Nannilam

பேருந்து நிலையத்தில் கடைகள் ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி

நன்னிலத்தில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் நன்னிலம் பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பேருந்து நிலையத்தில் 24 கடைகள் கட்டப்பட்டு வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருவாரூர், திருச்சி, காரைக்கால் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதியிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 43 பேருந்துகள் வந்து செல்கின்றது. இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்கப்படாததால் பயணிகள் வெயிலிலும் மழையிலும் நிற்கும் நிலை உள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடை, மற்றும் பேன்சி ஸ்டோர், பேக்கரி உள்ளிட்ட கடைகள் பயணிகள் நிற்கும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பொருட்களை வைத்துள்ளன. பயணிகள் நடப்பதற்கு கூட வழியில்லாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பேருந்து நேரக் காப்பாளர் அறை மூடப்பட்டு பயணிகள் அமரும் இடத்தில் போக்குவரத்து நேர காப்பாளர் அமர்ந்து பணி செய்து வரும் நிலை உள்ளது. குறிப்பாக பள்ளி கல்லூரி விடும் நேரத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நன்னிலம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை அப்புறப்படுத்தியும், பயணிகள் வெயில் மற்றும் மழையில் பாதிக்காத அளவிற்கு மேற்கூரை அமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

வீடியோஸ்


திருவாரூர்
Sep 09, 2024, 04:09 IST/மன்னார்குடி
மன்னார்குடி

அக்கரை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Sep 09, 2024, 04:09 IST
மன்னார்குடி அக்கரை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ பாலம் பகுதியில் அக்கரை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு 79வது ஆண்டாக தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய விழாவான தீமிதி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் செடியில் காவடி பால் குடங்கள் எடுத்து மன்னார்குடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்து நூற்றுக்கணக்கான பெண்கள் கோவில் வாசலில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக் கடை செலுத்தினர். பின்னர் மாரியம்மன் க்கு சிறப்பு மலர் அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் மன்னார்குடியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.