44 வயதில் போராடி பெற்ற குழந்தை..! தாயுடன் இறந்த சோகம்

69பார்த்தது
44 வயதில் போராடி பெற்ற குழந்தை..! தாயுடன் இறந்த சோகம்
திருவள்ளூரை சேர்ந்த ஜெயவேல் - உஷாராணி தம்பதியின் மகன் 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். ஒரே மகனை பறிகொடுத்த தம்பதி பல்வேறு மருத்துவ சிகிச்சை எடுத்தபின் 4 ஆண்டுகளுக்கு முன் உஷாராணி 44 வயதில் இரட்டை குழந்தை பெற்றெடுத்தார். தம்பதி மற்றும் 2 குழந்தைகள் செப். 8 வாடகை காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் உஷாராணி, அவரின் ஒரு குழந்தை, ஓட்டுனர் உயிரிழந்தனர். ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்தது விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி