
திருவள்ளூர்: ரூ.9 கோடி மதிப்பிலான வெள்ளி கட்டிகள் கொள்ளை
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி அதானி தனியார் துறைமுகத்தில் அமைந்த சிஎஸ்எஃப் கண்டைனர் முனையத்தில் ரூ.9கோடி மதிப்பிலான 922கிலோ கிராம் எடையுள்ள 30 வெள்ளிப் பார்கள் மர்மநபர்கள் பலத்த பாதுகாப்பிற்கு இடையே சிசிடிவி கேமரா பாதுகாப்பு உள்ளிட்டவைகளை மீறி நூதன முறையில் கொள்ளை அடித்துச் சென்றனர். இது குறித்து லண்டனில் இருந்து எச்எஸ்பிசி வங்கி மூலம் 2 கண்டைனர்களில் முறையே 20டன் மற்றும் 19டன் என கண்டைனரில் சீல் வைக்கப்பட்ட நிலையில் 39டன் எடையுள்ள வெள்ளி பார்களை சென்னை அதானி துறைமுகத்திற்கு கடந்த மாதம் 30-ம் தேதி வந்ததை சுங்கத்துறை சோதனைக்குப் பின்னர் இறக்குமதி செய்த நிறுவனம் வெளியே எடுக்க இருந்த நிலையில் கண்டைனரை திறந்து மர்மமான முறையில் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் வெள்ளிப் பார்களை இறக்குமதி செய்த தாசரி ஸ்ரீ ஹரி ராவ் என்பவர் அளித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அதானி துறைமுக வளாகத்தில் கண்டைனர் முனையத்தில் 9 கோடி மதிப்புள்ள வெள்ளிக்கட்டிகளை கடத்தியதாக நவீன் குமார், ஆகாஷ், எபினாஸ், தேசிங்கு, குணசீலன், சந்தோஷ், வெங்கடேஷ் ஆகிய 7 பேரை காட்டூர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து வெள்ளி கட்டிப்பார்களை பறிமுதல் செய்ததுடன் 7 பேரையும் பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.