திருவெற்றியூர் - Thiruvetriyur

குடிபோதையில் போலீசை தாக்கிய மூவர் கைது.

குடிபோதையில் போலீசை தாக்கிய மூவர் கைது.

*குடிபோதையில் இருச்கர வாகனத்தில் வந்த"மூவர்* *சோதனை செய்த உதவி ஆய்வாளரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை சிசிடிவி பதிவுகளை வைத்து கைது செய்த இராயபுரம் போலீசார்* சென்னை இராயபுரம் பகுதிக்கு உட்பட்ட ஆதம் தெரு பகுதியில் சென்னை காவல் சார்பாக (கண்ட்ரோல் ரும் எஸ் ஐ) உதவி ஆய்வாளர் செந்தில் குமார் இராயபுரம் போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை உதவி ஆய்வாளர் செந்தில் தடுத்து சோதனை செய்த போது மது போதையில் இருந்த மூவரும் உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர் இது தொடர்பாக இராயபுரம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த முகிலன்(23) விக்னேஷ் (23) சரத்குமார் (29) ஆகிய மூன்று பேரை அப்பகுதியில் உள்ள சி சி டிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்