மதுரவாயல் - Maduravayal

வெயில் உக்கிரத்தால் முதியவர் சுருண்டு விழுந்து பரிதாப பலி

வெயில் உக்கிரத்தால் முதியவர் சுருண்டு விழுந்து பரிதாப பலி

திருத்தணி பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த 10 நாட்களாக 108 டிகிரி வெயில் கொளுத்தி வருவதால் அனல் காற்று வீசுகிறது. இதனால், சிறுவர் முதல் முதியவர் வரை அனைத்து தரப்பு மக்களும் அவதியுற்று வருகின்றனர். வெயிலின் உக்கிரத்தால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில், திருத்தணி பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்த ஆதரவற்ற முதியவர் நேற்று மதியம் வெயில் காரணாக சுருண்டு விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி உதவி காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், இறந்துபோன முதியவர் ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல் கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் (66) என்பது தெரியவந்தது. இதுபோல் நேற்று முன்தினம் பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்த வரலட்சுமி என்ற பெண் கத்திரி வெயிலுக்கு சுருண்டு விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా