மதுரவாயல் - Maduravayal

புதர் மண்டி சீரழியும் எஸ். வி. ஜி. புரம் பெரியகுளம்

புதர் மண்டி சீரழியும் எஸ். வி. ஜி. புரம் பெரியகுளம்

ஆர். கே. பேட்டை ஒன்றியம், எஸ். வி. புரம் கிராமத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில், இரண்டு பொது குளங்கள் உள்ளன. கிழக்கு மற்றும் மேற்கில் உள்ள குளங்களுக்கு இடையே நிலத்தடி நீரோட்டம் இருப்பதாகவும் கிராமத்தினரால் நம்பப்படுகிறது. இரண்டு குளங்களுக்கும் இடையே, வடக்கு மற்றும் தெற்கில் இரண்டு மலைத்தொடர்கள் உள்ளன. இதனால், குளங்களுக்கு நீர்வரத்தும் சிறப்பாக உள்ளது. இதில், மேற்கில் உள்ள குளம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், குடிநீர் ஆதாரமாக விளங்கியதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த குளம் பராமரிக்கப்படாததால், புதர் மண்டி சீரழிந்து வருகிறது. குளத்தின் நீர்வரத்து கால்வாய் மற்றும் படித்துறையும் புதரில் மறைந்துள்ளன. குளத்தை சீரமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

வீடியோஸ்