உத்தரப் பிரதேச மாநிலம் பைக் விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரம்பூர் கிராமத்தில் பைக்கில் சென்ற 27 வயது இளைஞர், கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மகன் இறந்த செய்தி அறிந்து மனமுடைந்த அவரது தாயார், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.